Tuesday 23 April 2013




கை கொடு மச்சி..!


விழுந்தவன் எழுவது
உலகினில் நியதி!
அழுதவன் மீண்டும் 
விழுவது உறுதி!

கீழே விழுந்த
துகளல்ல நாமெலாம்;
காற்றுள பந்துகள்
எதிர்த்து எழும்புவோம்!

எழும்பிடும் பந்தே
கோல்கம்பம் நுழையும்!
தேங்கிடும் பந்துகள்
தோல்வியில் உறையும்!

தோல்வி அனுபவம்
வெற்றியின் ஆசான்!
தோல்வியில் துவண்டவனை
எவனும் பேசான்!

வென்றவர் சரித்திரம்
சொல்வது எல்லாம்,
ஒன்று படுதலே
வெற்றியின் ரகசியம்!

கவுரவர், பாண்டவர்
மோதினால் பாரதம்!
கவுரவர் – கவுரவர்
மோதுதல் கேவலம்!

நமக்கெதி ராக
நமது வாட்களா?
பிறர்நடைப் பாதையில்
நம்வனப் பூக்களா?

நிறங்களை விடுத்து
கரங்களை இணைத்து
ஒவ்வொரு நொடியையும்
உன்னதம் ஆக்குக!

1 comment:

  1. //பிறர்நடைப் பாதையில்
    நம்வனப் பூக்களா? // - 'நச்' சார்

    ReplyDelete