தண்டி ஓட்டம்!
-பெ. கருணாகரன்
வெற்றிக் கோடு
குறித்துக்
கவலையில்லை எனக்கு...
அது வெறுமையால் நிறைந்தது
முன்னாலும், பின்னாலும்
ஓடிக் கொண்டிருப்பவர்கள் குறித்தும்
கவனமில்லை எனக்கு
அது நிரந்தரமற்றது
கவலையில்லை எனக்கு...
அது வெறுமையால் நிறைந்தது
முன்னாலும், பின்னாலும்
ஓடிக் கொண்டிருப்பவர்கள் குறித்தும்
கவனமில்லை எனக்கு
அது நிரந்தரமற்றது
முந்திச் செல்பவன்
குறித்த பொறாமையோ
பிந்திச் செல்வது குறித்த அவமானமோ
எதுவும் இல்லை எனக்கு
பிந்திச் செல்வது குறித்த அவமானமோ
எதுவும் இல்லை எனக்கு
எந்தக் குதிரையும்
முதலில் வருவதற்காகச் சந்தோஷமோ
கடைசியில் வந்ததற்காக வருத்தமோ கொள்வதில்லை.
ஓடுதல் மட்டுமே குதிரைக்குச் சந்தோஷம்
முதலில் வருவதற்காகச் சந்தோஷமோ
கடைசியில் வந்ததற்காக வருத்தமோ கொள்வதில்லை.
ஓடுதல் மட்டுமே குதிரைக்குச் சந்தோஷம்
கிண்டி மைதானமாயினும்
தண்டி மணற்பரப்பாயினும்
ஓடுவேனே தவிர,
யாத்திரை செய்ய மாட்டேன்.
தண்டி மணற்பரப்பாயினும்
ஓடுவேனே தவிர,
யாத்திரை செய்ய மாட்டேன்.
அதனை தண்டி ஓட்டம்
என்று
சரித்திரம் குறிப்பெழுதிக் கொள்ளும்.
சரித்திரம் குறிப்பெழுதிக் கொள்ளும்.
No comments:
Post a Comment